வட்ட ரயில் பாதை வழிகாட்டிக் குறியீடுகளுக்கு மக்கள் கருத்து வரவேற்பு

whatsapp
facebook
x
copylink

வட்ட ரயில் பாதை வழிகாட்டிக் குறியீடுகளுக்கு மக்கள் கருத்து வரவேற்பு

2 mins read
whatsapp
facebook
x
copylink
d89e2a57-b894-4cfb-96d5-0908bb6ddb02
பயணிகள் செல்ல விரும்பும் பாதைகளின் மாதிரி வழிகாட்டிக் குறியீடுகள், நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அவர்களின் கருத்துகளை அவற்றில் காணப்படும் விரைவுத் தகவல் (QR) குறியீட்டை வருடி தெரிவிக்கலாம். - படம்: சாவ் பாவ்

வட்ட ரயில் பாதைகளில் உள்ள நிலையங்களில் நிலப் போக்குவரத்து ஆணையம் புதிய வழிகாட்டி அறிவிப்புகளை பொருத்தவிருக்கிறது.

கெப்பல், கென்டோன்மன்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு ஆகிய நிலையங்கள் 2026ம் ஆண்டின் முதல்பாதியில் திறக்கப்படவுள்ளன. ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்துக்கும் மரினா பே நிலையத்துக்கும் இடையே உள்ள ரயில் பாதைகள் அப்போது நிறுத்தப்படும். பயணிகள் செல்ல விரும்பும் ரயில் வழிப்பாதைகளை அறிவிக்கும் இந்த வழிகாட்டிக் குறியீடுகள் ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

வட்டப் பாதையின் ஆறாம் கட்ட விரிவாக்கப் பணிகள் புதிய சேவைத் தடங்களை அறிமுகப்படுத்தும். அவை மற்ற எம்ஆர்டி பாதைகளில் இல்லாதவையாக அமையும்.

பல வளைவு சுழிவுப் பாதைகளை பயணிகள் மேற்கொள்ளவேண்டியிருக்கலாம். மேலும் சில நிலையங்களில் ரயில் தண்டவாளங்கள் மாறுபட்ட மாடிகளில் இருக்கும். எனவே, அவற்றை சென்றடைய முறையாக ஒரு வழியை கண்டறிய வேண்டும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

ஆகவே, மார்ச் 14 முதல் 17ம் தேதிவரை பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் பங்கேற்கலாம். சன்டெக் சிட்டி கடைத்தொகுதியைப் புரோமினாட் ரயில் நிலையத்துடன் இணைக்கும் வாயில், அந்நிலையத்தின் கட்டண வாயில் (Exit C அருகில்), தண்டவாளத் தடம் (Platform B) ஆகிய இடங்களில் விரைவுத் தகவல் (QR) குறியீட்டை வருடி கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

பயணிகள் செல்ல விரும்பும் பாதைகளின் மாதிரி வழிகாட்டி வடிவங்கள் புரோமினாட் நிலைய தண்டவாளத் தடம் (Platform B) அருகில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கு டோபிகாட் மற்றும் மரினா பே நிலையங்களுக்கு இடையே ரயில்கள் பயணிக்கின்றன.

நிலப் போக்குவரத்து அதிகாரிகளும் அங்கு பணியில் இருந்து உதவி தேவைப்படுவோருக்கு உதவுவர். ரயில்களிலும் நிலையங்களிலும் அமையவுள்ள பற்பல வழிகாட்டிகளுக்கான குறியீடுகளைப் பயணிகள் தேர்வுசெய்யலாம். ரயில் தண்டவாளத் தடங்கள் அருகே, ரயில்களின் உட்பகுதி, ரயில்களின் வரவை முன்னுரைக்கும் மின்னியல் வழிகாட்டிகள் ஆகியவை அறிவிப்பு சின்னங்களில் அடங்கும்.

இதற்கு முன்பாக நிலப்போக்குவரத்து ஆணையம், பயணிகள், மாணவர்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் என 50 பங்காளிகளுடன் கருத்துக் கணிப்புகள் நடத்திய பின்னரே, தற்போதைய குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் go.gov.sg/ccl6pe என்ற இணைய முகவரியிலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

whatsapp
facebook
x
copylink
குறிப்புச் சொற்கள்

அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்கள் ஓமானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

whatsapp
facebook
x
copylink

அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்கள் ஓமானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

1 mins read
whatsapp
facebook
x
copylink
2b01e166-062b-478b-aa67-d329471f1323
அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்கள் இரண்டு குழுக்களாக ஓமானின் மஸ்கட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். - படம்: ஃபேஸ்புக்/அபுதாபியிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகம்

அபுதாபியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகமும் துபாயில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகமும் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) காலையில் அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்களை இரண்டு குழுக்களாக ஓமானின் மஸ்கட்டுக்கு அனுப்பியுள்ளன.

அவர்கள் சனிக்கிழமை (மார்ச் 7) மஸ்கட்டிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் செல்வார்கள். பயணத்தின் முதற்கட்டமாக, சிங்கப்பூர்த் தூதரக, துணைத் தூதரக அதிகாரிகள் அவர்களுடன் பேருந்தில் செல்வார்கள்.

மஸ்கட்டில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகமும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் நெருக்கடிநிலைச் சமாளிப்புக் குழுவும் ஓமானில் அவர்களுக்கு ஆதரவு வழங்கும்.

புறப்படுவதற்கு முன்னர், சிங்கப்பூரர்களிடம் தூதர் கமல் ஆர் வாஸ்வானியும் துணைத் தூதர் ரஸிஃப் அல்ஜுனிட்டும் பேசினார்கள். விமானச் சேவைகள் ரத்தானதால், பலருக்குச் சவால்மிகுந்த வாரமாக அமைந்தது.

இப்போது அவர்கள் வீடு திரும்ப முடியும் என்பதால் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் பயணிகளுக்கு அது பாதுகாப்பான, சுமுகமான பயணமாக அமையவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள் கூறினர்.

whatsapp
facebook
x
copylink
என்ன நினைக்கிறீர்கள்?
குறிப்புச் சொற்கள்

மத்திய கிழக்குச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க இடையூறு இல்லை: சேட்ஸ்

whatsapp
facebook
x
copylink

மத்திய கிழக்குச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க இடையூறு இல்லை: சேட்ஸ்

1 mins read
whatsapp
facebook
x
copylink
63dc680a-bb79-4a1a-a38c-1b66caef0e8d
ஈரானுக்கு எதிராக அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடரும் நிலையில், சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் புகை கிளம்புவதைப் பார்க்கமுடிகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சில வளைகுடா நாடுகளில் எதிர்பாராவிதமாக மூடப்பட்டுள்ள வான்வழிகள் காரணமாக, உலகளாவிய ஆகாயச் சரக்கு விநியோகத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தனது மத்திய கிழக்குச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் இல்லை என்று விமானச் சரக்குகளைக் கையாளும் ‘சேட்ஸ்’ நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானுக்கு எதிராக அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, சவூதி அரேபியாவிலும் ஓமானிலும் உள்ள ‘சேட்ஸ்’ மத்திய கிழக்கு நிலையங்களில் செயல்பாடுகள் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் தொடர்வதாக வெள்ளிக்கிழமை (மார்ச் 6) வெளியிடப்பட்ட அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

அந்த வட்டாரத்தில் உள்ள அதன் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ‘சேட்ஸ்’ கூறியது. அங்குப் பணிபுரியும் சிங்கப்பூரர்களும் அவர்களில் அடங்குவர்.

மத்திய கிழக்குப் போரை அணுக்கமாகக் கண்காணிப்பதாக ‘சேட்ஸ்’ கூறியது. சில வளைகுடா நாடுகளில் வான்வழிகள் மூடப்பட்டிருப்பது குறித்து அது ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

விமான நிறுவன வாடிக்கையாளர்களுடன் அணுக்கமான தொடர்பில் இருப்பதாகவும் அது கூறியது. வர்த்தகத் தடங்களின் மாற்றங்களுக்கு ஏற்ப தனது செயல்பாடுகள் தொடர்ந்து மாற்றியமைக்கப்படும் என்று ‘சேட்ஸ்’ தெரிவித்தது.

வான்வழிகள் மூடப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் நாடுகளுக்கு, சவூதி அரேபியாவிலும் ஓமானிலும் உள்ள அதன் வசதிகள் மாற்று வழிகளாக அமையக்கூடும் என்று ‘சேட்ஸ்’ கூறியது.

whatsapp
facebook
x
copylink
என்ன நினைக்கிறீர்கள்?
குறிப்புச் சொற்கள்